மொழிகள்

பாடம் 4 காணொளி

பாடம் 4

இயேசு மரணிப்பதன் மூலம் என்ன நிறைவேற்றினார் என்பதைப் பற்றி நாம் பேசியபோது, ​​அவரைப் பற்றிய அவரது கூற்றுகளை நாம் நம்புவது அவருடைய வாக்குத்தத்தங்களுக்கான அணுகலை நமக்கு கிடைக்கச் செய்ததை நாம் கண்டோம், ஆனால் அவருடைய வாக்குறுதிகள் நம் வாழ்வில் உண்மையானதாக மாற, நமது அணுகுமுறை மற்றும் நடத்தையில் மாற்றம் தேவை.

தன்னைப் பற்றி அவர் கூறுவதையும், நம்மைப் பற்றி அவர் கூறுவதையும் வாசிப்பதிலும் நம்புவதிலும் தான் மாற்றம் தொடங்குகிறது. இயேசு நம்மைப் பற்றி என்ன கூறுகிறார் என்பதற்கு மாறாக, தன்னைப் பற்றி என்ன கூறுகிறார் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. இயேசு முற்றிலும் நல்லவர்.[3]நாம் தீய எண்ணங்களால் நிறைந்துள்ளோம்.
  2. இயேசு நம்மை நேசித்தார். நாம் அவரை வெறுத்தோம்.
  3. இயேசு நம்மைத் தேர்ந்தெடுத்தார். நாம் அவரை நிராகரித்தோம்.
  4. இயேசு தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார். நாம் தேவனின் விதிகளுக்கு எதிராக இருந்தோம்.
  5. இயேசு நாம் உட்பட அவருடைய எதிரிகளுக்காகவும் முன்வந்து துன்பப்பட்டார். நம் அன்புக்குரியவர்களுக்காகக் கூட நாம் கஷ்டப்படத் தயாராக இல்லை.
  6. இயேசு மிகப் பெரிய சேவகர். நாம் சேவை செய்ய விரும்புவதில்லை, ஆனால் நமக்கு சேவை செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறோம்.
  7. இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். நாம் கல்லறைகளில் விழுவதற்கு விதிக்கப்பட்டுள்ளோம், ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது, ஏனென்றால் இயேசு தம் உயிரை நமக்கு வழங்வார்.

இயேசு என்பவர் தேவன், ஆனால் உண்மையில் அவர் ஒரு மனிதரே. இதுவரை வாழ்ந்தவர்களில் அவர் மிகப் பெரிய மனிதர் ஆவார், அவர் நம்மை நேசிப்பதற்கு தேர்ந்தெடுத்தார், நாம் அவருக்கு எதிரிகளாக இருந்தாலும் நம் மீது கொண்டுள்ள அன்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார்.

இயேசுவை பணிவுடன் அணுகாத பட்சத்தில் யாரையும் இயேசுவால் மாற்ற முடியாது. இயேசு மந்திரவாதி அல்ல. அவர் நம் மனதில் உள்ள ஒவ்வொன்றையும் அறிந்த ஒரு நபர்.

தேவன் பெருமையுள்ளவர்களை எதிர்க்கிறார், ஆனால் தாழ்மையானவர்களுக்கு கிருபை அளிக்கிறார் என்று பைபிள் கூறுகிறது. நாம் விரும்புவதைப் பெறுவதற்காக இயேசுவைப் பயன்படுத்த விரும்பினால், நாம் ஒருபோதும் அவரால் ஆசிர்வதிக்கப்பட மாட்டோம். நாம் நம்முடைய தீமையிலிருந்து விலகி, அதை வெறுக்கத் தொடங்கி அவருடைய நல்லதைத் தேர்ந்தெடுக்காதவரை, அவரையோ அவருடைய வாக்குறுதிகளின் பலனையோ நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.

தீமையைக் குறித்து வருந்துகின்ற இந்த மனப்பான்மை, இயேசுவின் நற்குணத்திற்கான தீவிர ஆசை மற்றும் அவருடைய வாக்குறுதிகளில் உறுதியான நம்பிக்கை ஆகியவை நமது புதிய இயல்பானதாக மாறுகிறது.பைபிளில் அவர் கூறியுள்ளதை நாம் படித்து, ஜெபம் செய்து, அவருடைய சித்தத்தைத் தேடும்போது, ​​நம் மனப்பான்மை பெருமையிலிருந்து பணிவுக்கு மாற்றமடையும். நாமும் அவரைப் போன்று வாழத் தொடங்குவோம்.

இயேசு நம் மனதைப் பார்க்கிறார். நாம் தீமையை வெறுத்து அதற்குப் பதிலாக அவருடைய நன்மையை விரும்ப வேண்டும். பிறகு, நம்மை மன்னிக்கும்படி இயேசுவிடம் மண்டியிட்டால், அவர் நம்மை மன்னிப்பார்.

உண்மையான பணிவுடன் நாம் அவரை அணுகும்போது, உடைந்த நிலையில் உள்ள நமது மனதை அவர் சரிசெய்யத் தொடங்குவார். ஆனால் இதற்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும், மற்றும் தேவன் நம்மை நேசிக்கவும், அவருடைய நற்குணமாக நம்மை வளர்க்கவும் தேர்ந்தெடுத்த உண்மைக்கு ஏற்ப நம் வாழ்க்கையை வாழும்போது, தேவன் நமக்கு வாழ்க்கையையும், மகிழ்ச்சியையும், அன்பையும் தருகிறார்.

செயல்பாட்டில் நம்மை அவர் எப்படி ஈடுபடுத்துகிறார் என்பது அழகாக இருக்கிறது அல்லவா?

உங்கள் தீமைக்காக நீங்கள் வருந்தினால், அது நல்ல விஷயமாகும்! அவரிடம் சென்று பணிவுடன் மண்டியிட்டு, உங்களைப் பற்றிய உண்மையை உங்களுக்குக் காட்டியதற்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள். இயேசு உங்களை அன்புடன் இரட்சிக்கிறார் என்பதற்கு இதுவே சான்றாகும்.

உங்கள் தீமையிலிருந்து விடுபட்டு இயேசுவைப் போன்று மாறுங்கள். எப்போதும் பைபிளை வாசியுங்கள். பிரார்த்தனையில் மூழ்கி விடுங்கள். இயேசு யார் என்பதையும், அவர் உங்களுக்குள்ளும் உங்கள் மூலமாகவும் என்ன செய்யப் போகிறார் என்று தியானம் செய்யுங்கள். அவருடன் நெருங்கிய நட்பில் வாழ்ந்து அவருக்கு அடிபணியுங்கள். அவருடைய அன்பும் வாக்குறுதிகளும் தூய்மையான வாழ்க்கையை வாழ்வதற்கான ஆற்றலையும் அதிகாரத்தையும் உங்களுக்கு வழங்குகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இது ஒரு நிலையான, தினசரி செயல்முறையாகும். நீங்கள் இதனை பின்பற்றவில்லை எனில், குற்ற உணர்வு அல்லது நம்பிக்கையற்ற உணர்வில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் தோல்வியுற்ற தருணம் நீங்கள் உடனடியாக தேவனை அணுக வேண்டிய தருணமாகும். உங்கள் தீமை தேவனை விட சக்திவாய்ந்தது என்ற எண்ணம் கேலிக்குரியது. நீங்கள் இயேசுவிற்கு எதிராக வாழ்ந்தபோதும் அவர் உங்களை நேசித்தார். நீங்கள் அவருடைய குழந்தை என்பதால் நிச்சயமாக அவர் உங்களை மன்னிப்பார்! அவர் உங்கள் தீமையை விட வலிமையானவர், அவர் உங்களை மிகவும் அதிகமாக நேசிக்கிறார். இதை நம்புங்கள், நீங்கள் நம்பிக்கையை இழக்க மாட்டீர்கள்.

மேலும் ஆராயுங்கள்

வாசிக்கவும் 1 யோவான் 1, எபேசியர் 5:8, மற்றும் யோவான் 11:9-10, மன்னிப்பு பற்றிய உங்கள் புரிதலையும், "தேவனின் பாதையை கடைபிடிப்பது" என்றால் என்ன என்பதையும் எழுதுங்கள். அதைப் பற்றி ஜெபித்து, நம்பகமான கிறிஸ்தவ நண்பரிடம் நேர்மையாகப் பேசுங்கள். நீங்கள் வெளிச்சத்தில் செல்கிறீர்களா? இல்லை என்றால், வெளிச்சத்தில் அடியெடுத்து வைக்க இன்று என்ன மாற்றத்தை உங்களால் செய்ய முடியும்?